Skip to main content

ஊரிக்காடு

 

ஊரிக்காட்டின்
கடலோரம்
ஒதுங்கிக் கிடந்தன
அவர்களின் இலட்சியக் கனவுகள்

வீடிழந்தோர்
வாழ்விழந்தோர்
சொந்த நிலமிழந்தோர்
கடல் கடந்தோர்
உயிரிழந்தோர்
உடலுறுப்பிழந்தோர்
வாழ்வோர்
வாழ்ந்துகொண்டு சாவோர்

ஊரிக்காட்டின்
கடலோரம்
ஒதுங்கிக் கிடந்தன
அவர்களின் இலட்சியக் கனவுகள்

சற்றுத்தூரத்தில்
ஒரு வீடு
இடிக்கப்பட்டு
அது இருந்த தடயம்
அழிக்கப்பட்டுக் கிடந்தது
கூடவே
அங்கு வாழ்ந்த மனிதரின் கனவும்

கனத்த மனதோடு
குனிந்து பார்க்கிறேன்
கிளிஞ்சல்களுக்குள்
சுதந்திரக் கனவு
அரித்துப்போய்
ஓட்டைகளோடு
அநாதரவாய்க் கிடக்கிறது

சுற்றுலாப் பயணிபோல்
கடந்து போக முடியாமல்
தடக்கி நிற்கிறேன்.

Comments

Popular posts from this blog

Are you listening?